Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

June 7, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாகப் பல பகுதிகளில் டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடையாளம் காணப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், நுளம்புக் குடம்பிகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாளை திங்கட்கிழமை (8) முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய, அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளைப் பிரதான கேந்திர நிலையங்களாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 5ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 36,168 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நுளம்புப் பெருக்கமும் அதிகரித்துள்ளது. அதற்கமைய கொழும்பு (கொழும்பு மாநகர சபையும்), கம்பஹா, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி, புத்தளம், கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் நோய்த்தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், நுளம்புகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் 74 சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைகளைப் பிரதான கேந்திர நிலையங்களாகக் கொண்டு ஜூன் 8, 9, 10 ஆகிய மூன்று தினங்களும் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. சுகாதார ஊழியர்கள், முப்படையினர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தன்னார்வத் தொண்டர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 பேர்  உயிரிழந்துள்ளனர்.

கடந்த மாதம் மாத்திரம் நாட்டில் சுமார் 8,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இம்மாதம்  இதுவரை 2,315 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. ஆகையினால் நீடித்த காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு  தேசிய டெங்கு கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் கபில பி. ஜயரத்ன வலியுறுத்தியுள்ளார்.

Previous Post

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு

Next Post

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

Next Post
மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

June 7, 2026
மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

June 7, 2026
நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

June 7, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு

June 7, 2026

Recent News

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

பரிமளா & கோ – திரைப்பட விமர்சனம்

June 7, 2026
மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

மே.தீவுகளுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் மந்தகதி பந்துவீச்சு வீதத்திற்காக இலங்கைக்கு அபராதம்

June 7, 2026
நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

நாளை முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

June 7, 2026
செம்மணியில் மீட்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பில் CID விசாரணை அறிக்கையும் சமர்ப்பிப்பு

செம்மணியில் இன்றும் இரு சிறுவர்களுடைய என்புகூடுகள் மீட்பு

June 7, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures