Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

தமிழ்நாட்டு தலைநகர் சென்னையில் உள்ள கோயம்பேடு மேம்பாலத்திற்கு அடியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண்கள் மீது கார் ஒன்று மோதி தள்ளியதில் 18 வயதுடைய இலங்கைத் தமிழ் அகதிப் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை (30) அதிகாலை வேளையில் அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சிச் சம்பவம், களியாட்ட விடுதியில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தில் நிகழ்ந்துள்ளது என சென்னை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி என்ற இலங்கைத் தமிழ் அகதிப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து பொலிஸ் தரப்பில் விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில், 

உயிரிழந்த யான்சி, தனது 17 வயதுடைய தோழியுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் களியாட்ட விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் தங்களது நண்பர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்த போது, அங்கிருந்த மற்றொரு ஆண்கள் குழுவிற்கும் இவர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது.

நிலைமை மோசமடைந்ததை அடுத்து, களியாட்ட விடுதியின் பாதுகாவலர்கள் தலையிட்டு இரு குழுவினரையும் சமாதானப்படுத்தி வெளியில் அனுப்பியுள்ளனர். எனினும், களியாட்ட விடுதி வெளியேயுள்ள கடையொன்றின் அருகிலும் இருதரப்பும் மீண்டும் மோதலில் ஈடுபடவே, பாதுகாவலர்கள் அவர்களை மீண்டும் எச்சரித்து அங்கிருந்து விரட்டியடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து யான்சியும் அவரது தோழியும் ஒரு இருசக்கர வாகனத்தில் ஏறி திருமங்கலம் நோக்கிப் பயணித்துள்ளனர்.

அப்போது, வழியில் சென்றுகொண்டிருந்த போது யான்சியின் தோழி, தங்களோடு மோதலில் ஈடுபட்ட ஆண்களின் காரை நோக்கி திடீரென கற்களை வீசியுள்ளார். இதனால் கடுமையான ஆத்திரமடைந்த அந்த ஆண்கள் குழு, தங்களது காரை அதிவேகமாகச் செலுத்தி, யான்சி பயணித்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் இருந்து கொடூரமாக மோதியுள்ளது.

“இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த யான்சி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அருகில் இருந்த அவரது 17 வயது தோழி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில், மேலதிக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஆறு பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ள சென்னை பொலிஸார், அதில் மூன்று பேரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 19 மற்றும் 21 வயதுடையவர்களாவர். அவர்களின் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ஏனைய மூன்று குற்றவாளிகளையும் தேடிக் கண்டுபிடிப்பதற்காக விசேட பொலிஸ் படையணியொன்று அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Previous Post

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Next Post

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

Next Post
குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures