Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

February 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
தலைவரின் தம்பி சீமானுடன் நிற்பது எம் கடமை – கிருபா பிள்ளை

திருச்சி மகாநாட்டிற்கு வந்த எல்லோர் உள்ளத்திலும் எங்கள் ” மேதகு தேசியத் தலைவர் இருக்கிறார்” என்பதை அழுத்தம் திருத்தமாக சாத்தியாக்கிய அன்புச் சகோதரன் திரு சீமான் அவர்களுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும்.

தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் விதைத்து இன்று பெரும் சிகரமென உயர்ந்துள்ளார் சீமான் அவர்கள். அதற்காக கடந்த காலத்தில் பெரும் உழைப்பை சீமான் அவர்களும் அவரின் தலைமையிலான தம்பிகளும் வழங்கியுள்ளனர்.

ஈழநாட்டில் எமது அரசியல் தலைமைகள் தமிழ் தேசிய அரசியலை கையாள்வதில் பெரும் பின்னடைவுகளை சந்தித்து வருகின்றனர். தமக்குள் அடிபட்டு எமது அரசியல் குரலை வலுப்படுத்த தவறி வருகின்றனர்.

சிங்களப் பேரினவாதம் சிதைக்காமலே தங்களை தாங்கள் சிதைத்து வரும் நிலையில் சீமான் ஈழத் தலைவர்களுக்கும் புலம்பெயர் தேச அமைப்புக்களுக்கும் நல்ல பாடத்தை உணர்த்தி வருகின்றனர்.

கடந்த காலத்தைவிட இம்முறை தேர்தலில் பாரிய வெற்றி நகர்வை சீமான் திருச்சி மாநாட்டில் திரண்ட மக்கள் வெள்ளத்தின் மூலம் சமிக்ஞை காட்டியுள்ளார். நாம் தமிழர்கள் ஆட்சி அதிகாரத்தை வெல்லும் வாய்ப்பின் நம்பிக்கை வெளிப்பாடு இது.

கொள்கையில் சமரசமின்மை, தனித்து நின்று தனியாக உயர்ந்து தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, ஈழ விடுதலைக்காய் குரல் கொடுக்கும் சீமானுடன் நாம் நிற்க வேண்டியது அவசியமான பணி.

ஊடகப் போராளி கிருபா பிள்ளை

Previous Post

நடிகர் வெற்றி நடிக்கும் ‘பிளாக் கோல்டு’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures