Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைப்பொருளுக்கு எதிரான அண்மைய யுத்தம் கேலிக்கூத்து என்கிறார் அம்பிகா சற்குணநாதன்

December 25, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
‘அரகலய’ வெற்றிபெற்ற அதேவேளை காணாமல்போனோரின் குடும்பங்களின் போராட்டம் பெற்றிபெறாதது ஏன்? | அம்பிகா

அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டிருப்பதாகவும், நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன் மூலம் பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றமுடியும் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினரும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களை ஒடுக்கும் விசேட வேலைத்திட்டம் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைவாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் சுமார் 10,000 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் இச்சுற்றிவளைப்புக்களில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவை மேற்கோள்காண்பித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) செய்திருக்கும் பதிவிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிராக தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் யுத்தம் ஏன் ஒரு கேலிக்கூத்தாகத் தெரிகிறது? என அப்பதிவில் கேள்வி எழுப்பியிருக்கும் அவர், கடந்த வாரம் 5 நாட்களாக நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் 10,000 க்கும் மேற்பட்டோரின் கைது ஆகியவற்றின் பின்னர் 7.7 கிலோகிராம் ஹெரோயின், 3.8 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 225.7 கிலோகிராம் கனபிஸ் போதைப்பொருள் மற்றும் 44,267 போதை மாத்திரைகள் என்பனவே மொத்தமாகக் கைப்பற்றப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அதுமாத்திரமன்றி அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்ட போதைப்பொருள் பாவனை மற்றும் இச்சுற்றிவளைப்பு நடவடிக்கைக்காக செலவிடப்பட்ட நேரம் மற்றும் வளங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு மிகச்சிறிதளவானவையே எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார். இது போதைப்பொருள் பாவனையாளர்கள் மற்றும் கீழ்மட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களே பிரதானமாக இலக்குவைக்கப்பட்டுள்ளனர் என்பதையே காண்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடுத்தர மற்றும் உயர்மட்டத்திலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களை இலக்குவைப்பதன் மூலம் பெருந்தொகையான போதைப்பொருட்களைக் கைப்பற்றமுடியும் எனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், எனவே போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய மிகமுக்கிய தரப்பினர் பற்றி அறிந்துகொள்வதற்கு ஏற்கனவே கைதுசெய்யப்பட்டவர்களை விசாரிக்கவேண்டும் என்று கூறமுடியாது எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

Previous Post

வீட்டுத் தேவைக்காக தேங்காய் எண்ணெய் வாங்கச் சென்ற இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை !

Next Post

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம் | இந்தியாவின் தலையீட்டை முழுமையாக களைவதற்கு பெரும் சதி என்கிறார் சி.வி

Next Post
எமது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படுமானால் சர்வகட்சியில் இணைவது குறித்து அவதானம் | விக்கினேஷ்வரன்

புதிய அரசியலமைப்பின் ஊடாக13 ஐ அகற்றுவதே அரசின் நோக்கம் | இந்தியாவின் தலையீட்டை முழுமையாக களைவதற்கு பெரும் சதி என்கிறார் சி.வி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures