Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்

August 24, 2019
in News, Politics, World
0

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மதியம் திடீெரன மரணமடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அருண்ஜேட்லி (66) முன்னாள் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தவர். அவருக்கு தோல் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதால், நியூயார்க்கில் சிகிச்சை மேற்கொண்டார்.

மேலும் இவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், உடல்நிலை பாதிப்பால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில் கடந்த 9ம் தேதி அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தது.

கடந்த சில நாட்களாக உயிர் காப்பு கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன. எக்மோ, இன்ட்ரா ஆர்டிக் பலூன் பம்ப் என்ற கருவிகளை பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

முன்னதாக அவரது உடல்நலம் குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று உடல் நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில், இன்று மதியம் 12. 25 மணியளவில் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவி பொருத்தப்பட்ட நிலையில், அருண்ஜெட்லி காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதனை தொடர்ந்து, பாஜ தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்ளிட்டோர் மருத்துவமனை விரைந்தனர்.

அரபு நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, இன்றிரவு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெட்லி உடல் இன்று மாைல அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து பாஜ அலுவலகத்துக்கு பொதுமக்கள் மரியாதை செய்யும் வகையில் வைக்கப்படும்.

ஜெட்லி மறைவு குறித்து, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். அருண் ஜெட்லி, டிசம்பர் 28, 1952ம் ஆண்டு பிறந்தார். வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் அரசு அதிகாரி என்று பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்.

மாநிலங்களவையில் பாஜ கட்சியின் தலைவராக பணியாற்றினார். 2009-14 காலகட்டத்தில், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தார்.

1973ம் ஆண்டில் வர்த்தகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 1977ம் ஆண்டில் டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்தார்.

பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில், இந்து சார்பு அமைப்பான ஆர். எஸ். எஸ் மாணவர் பிரிவான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) உறுப்பினரானார். 1974ல் பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975ல் அவசரநிலை காலகட்டத்தில் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்று, 19 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, 1977ம் ஆண்டில் ஜெய்த்லி லோகாந்தன்ட்ரிக் யோவா மோர்ச்சா இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளரானார். 1980 வாக்கில் பாஜ கட்சி உருவான பின்னர், அக்கட்சியில் சேர்ந்தார்.

1989-90ல் பாஜ தலைமையிலான அரசாங்கத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக பணியாற்றினார். 1991ல் கட்சியின் உயர்மட்ட அமைப்பான தேசிய குழுவில் ஜெட்லி சேர்க்கப்பட்டார்.

1999ல் கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் 2002-03ல் கட்சி பொதுச் செயலாளர் பதவியுடன் இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் (1999-2004) சட்டம், நீதி மற்றும் நிறுவன விவகார அமைச்சர் மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் உட்பட பலவிதமான அமைச்சர் பதவிகளில் பணியாற்றினார்.

2004 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை இழந்த பின்னர், பாஜவின் பொதுச் செயலாளராக ஜெட்லி நியமிக்கப்பட்டார். முதன்முதலில் 2000ம் ஆண்டில் மாநிலங்களவையில் குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2006 மற்றும் 2012ம் ஆண்டுகளில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009ல் மேலவையில் பாஜ சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2014 தேர்தலில் மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்டும் அவர் தோல்வியுற்றார்.

இருந்தும், தேர்தலில் பாஜவின் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பாதுகாப்பு, நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் ஆகிய மூன்று முக்கியமான இலாகாக்களுக்கு ஜெட்லிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

Previous Post

‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே

Next Post

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதி பாதுகாப்பு கேட்கிறார்

Next Post

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: நீதிபதி பாதுகாப்பு கேட்கிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026

Recent News

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

ஈக்வடோரை வீழ்த்தி 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது மெக்ஸிகோ

July 1, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அவசர கால சட்டம் இனியும் நீடிக்கப்பட மாட்டாது – அரசாங்கம் அறிவிப்பு

July 1, 2026
வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

வவுனியா மாநகர முன்னாள் மேயர் உட்பட 4 பேரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

July 1, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

பஸ் கட்டணங்களை 12% இனால் அதிகரிக்க தீர்மானம்

July 1, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures