2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தென்கொரிய அதிபராக இருந்தவர் லீ மியூங்-பக். வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்ட சாம் சங் குழும தலைவர் லீ குன்-கீக்கு இவர் கடந்த 2009ம் ஆண்டு மன்னிப்பு வழங்கினார். இதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. தென்கொரியாவின் தேசிய உளவுத்துறை நிதியில் இருந்து ரூ.64 லட்சம் எடுத்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பான விசாரணைக்கு லீ நேற்று முன்தினம் ஆஜரானார். அவரிடம் 21 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது அப்போது உளவுத்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரகசிய நிதியில் ரூ.64 லட்சம் நிதியை எடுத்துக் கொண்டதை லீ ஒப்புக் கொண்டார்.