சைபீரியாவில் உள்ள யாகூட்ஸ்கி விமான நிலையத்தில் சுமார் 10 டன் அளவிலான தங்கம், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் நிரப்பப்பட்டு நிம்பஸ் ஏர்லைன்ஸின் ஏ -12 ரக சரக்கு விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்டு குறிப்பிட்ட தூரம் பறந்து கொண்டிருந்த போது எடை தாங்க முடியாமல் பின்புற கதவு உடைந்தது. கதவு உடைந்ததால் விமானத்தில் இருந்த தங்க கட்டிகள் ஓடுதளத்தில் விழுந்து சிதறியது.
விமானம் பின்னர் அவசர அவசரமாக 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாகன் என்ற விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறக்கப்பட்ட உடனே அப்பகுதியை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். பின்னர் ஓடுதளத்தில் இருந்த தங்கக்கட்டிகளை கைப்பற்றினர். அனைத்து தங்கக்கட்டிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.