மதுபோதையுடன் வாகனத்தைச் செலுத்தினர் என்ற குற்றச்சாட்டில் 3 நாள்களில் ஆயிரத்து 400 க்கும் அதிகமான சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வாகனப் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த 15 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதிவரை சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், மதுபோதையில் வாகனம் ஓடினர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் அதிகம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2,505 மில்லியன் ரூபாவை
சாரதிகள் இழந்துள்ளனர்
இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் வாகனப் போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் சாரதிகளிடமிருந்து 2 ஆயிரத்து 505 மில்லியன் ரூபா பணம் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது என்றும் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட மேலும் தெரிவித்தார்.

