நாட்டில் இடம்பெற்ற கடந்த 21 ஆம் திகதி தற்கொலைத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 380 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவர்களில் அதிகமானோர் விசேட பாதுகாப்பின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்களை ஆதாரம் காட்டி சகோதர ஊடகமொன்று தெரிவித்துள்ளது.