பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய நான்கு பேரின் பெயர்கள் அமைச்சுப் பதவிகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காமினி விஜித் விஜேமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனவிரத்ன, ஏ.எச்.எம். பௌசி ஆகியோரின் பெயர்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கும் நோக்கில் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்காகக் கொண்டு இந்த பிரேரணை ஐக்கிய தேசியக் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவது குறித்தும் ஜனாதிபதி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளதாகவும் ஐ.தே.கட்சி வட்டாரங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

