ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐவருக்கும் எதிரான ஒழுக்காற்று நடவடிக்கை எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர எம்.பி. தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். பி. திஸாநாயக்க , லக்ஷமன் யாப்பா அபேவர்தன, டிலான் பெரோ, எ. எச். எம். பௌசி மற்றும் விஜித் விஜயமுனி சொய்ஷா ஆகியோர் கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டதாக கடந்த 16 ஆம் திகதி செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்திருந்தார். குறித்த 5 பேரும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.