சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்காவிட்டால் தொடர்ந்தும் அரசியலில் ஈடுபட்டு பயனில்லை எனவும், அவருக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் போராட்டத்தில் எப்படியாவது வெற்றிப்பெறுவதாகவும் பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இறுதி நேரத்திலாவது ரணில் விக்கிரமசிங்க வரலாற்று வெற்றிக்கான சாட்சியாக இருப்பார் என எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.