வடக்கு நோக்கிய புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொத்துஹெர மற்றும் பொல்கஹவெல புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளதன் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புதிய புகையிரதமான உத்தர தேவி புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.