ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
இரு மணி நேரங்கள் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.