எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ, பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ ஆகியோர் இன்று (28) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்றிரவு நடாத்திய கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடவுள்ளதாகவும் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தையின் போது விசேடமாக ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்தவுள்ள சின்னம் குறித்து கூடிய அவதானம் செலுத்தவுள்ளதாகவும் வீரகுமார எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.