போதைப்பொருட்கள் மற்றும் வெடிப்பொருட்களை கண்டறியக்கூடிய 750 மில்லியன் ரூபா பெறுமதியான அதிநவீன உபகரணங்களை சீனா அரசு இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.
சீனத் தூதுவர் Chang Xueyuan நேற்று (27) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உத்தியோகபூர்வமாக இந்த நவீன உபகரணத்தைக் கையளித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் விசேட தூதுக்குழுவினரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டுள்ளனர்.