தங்கல்லை, கிரிந்த பிரதேசத்தில் நேற்று (27) மாலை ஏற்பட்ட பதற்றமான நிலைமை தற்பொழுது முழுமையாக கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (26) இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதனால் மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ந்தே நேற்று மாலை அப்பிரதேசத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டதாக அப்பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.