ஜப்பானில் தொடர் மழை காரணமாக, அந்நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள குய்ஷூ தீவு வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
ஜப்பானில் கடந்த சில தினங்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் குய்ஷூ மாகாணத்துக்கு உட்பட்ட சாலைகளில் மழைநீர் கரைபுரண்டு ஓடுவதோடு, காற்றில் முறிந்து விழுந்த மரங்கள் மற்றும் தடுப்பு வேலிகளும் அடித்து செல்லப்பட்டன. மேலும் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கையாக 8 லட்சத்து 50 ஆயிரம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றியுள்ளனர். இந்த தொடர் மழையில் இருவர் உயிரிழந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜப்பானின் வடக்கு பகுதிகளிலும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்து வருவதால், அங்கு உச்சக்கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு வருகிறது.