பரந்துபட்ட கூட்டணி அமைப்பது தொடர்பாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இரவு விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற 7 ஆம் சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்தது.
இதன்போது, மஹிந்த மற்றும் ஜனாதிபதி மைத்திரி சந்திப்புக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையிலேயே இருவரும் நேற்று இரவு சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
ஜனாதிபதி சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இரு கட்சிகளுக்கிடையில் நடந்து வரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை அவர்கள் மறுஆய்வு செய்ததாகவும், அவற்றை ஒரு சாதகமான முறையில் தொடர இருவரும் ஒப்புக் கொண்டதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.