Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

September 15, 2026
in News, Sports, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடைபெற்ற அல்டிமேட் ஈட்டி எறிதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய இலங்கை ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க, தான் பயன்படுத்திய ஐந்து ஈட்டிகள் விமானப் பயணத்தின்போது உடைந்து சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவர், வழக்கமாக மகிழ்ச்சியுடன் விமான நிலையத்திற்கு வருவதாகவும், ஆனால் இம்முறை மிகவும் கவலையுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்தார்.

புடாபெஸ்டில் 91.09 மீற்றர் தூரம் எறிந்து சாதனை படைத்த ஈட்டி மற்றும் சுவிற்சர்லாந்தின் சூரிச் நகரில் 92.07 மீற்றர் தூரம் எறிய பயன்படுத்திய  ஈட்டி உள்ளிட்ட அவர் பயன்படுத்திய ஐந்து ஈட்டிகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஈட்டிகளை இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பயன்படுத்துவதற்கு ருமேஷ் திட்டமிட்டிருந்தார். பின்னர் அவற்றை தனது விளையாட்டு வாழ்க்கையின் நினைவுச் சின்னங்களாக பாதுகாக்கவும் அவர் எதிர்பார்த்திருந்தார்.

விமானத்தில் ஈட்டிகள் சேதமடைந்தமை தொடர்பாக துருக்கிய விமான சேவைக்கு எதிராக கட்டுநாயக்க விமான நிலையத்தில் ருமேஷ் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.

அல்டிமேட் மற்றும் டயமண்ட் லீக் ஆகிய இரு சாம்பியன்ஷிப் பட்டங்களையும் வென்ற ருமேஷ் தரங்க, இன்று அதிகாலை 5.10 மணிக்கு துருக்கியின் இஸ்தான்புல் நகரிலிருந்து துருக்கிய விமான சேவையின் TK-730 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரை வரவேற்பதற்காக அவரது பெற்றோர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள், விளையாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் அவர் பணியாற்றும் இலங்கை விமானப்படையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் விமான நிலையத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலக மெய்வல்லுநர் அல்டிமேட் சாம்பியன்ஷிப் மற்றும் டயமன்ட் லீக் ஆகிய போட்டிகளில் வெற்றிபெற்று சர்வதேச அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் விமானப் பயணத்தின்போது சேதமடைந்த சம்பவம் தொடர்பில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார கமகேவின் நேரடி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரிலிருந்து மேற்கொண்ட விமானப் பயணத்தின்போது ருமேஷ் தரங்கவிடம் இருந்த சர்வதேச தரத்திலான ஐந்து ஈட்டிகளும் உடைந்து சேதமடைந்துள்ளன.

இதையடுத்து, விளையாட்டு அமைச்சு உடனடியாக தலையிட்டு, அவரது எதிர்கால பயிற்சிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் அரசாங்கத்தின் முழுமையான செலவில் நவீன தரத்திலான புதிய ஈட்டி தொகுப்பொன்றை (New Javelin Set) விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பயணப் பொதிகளை கையாளும் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த கடுமையான அலட்சியம் தொடர்பில் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெற்றுக்கொள்வது உள்ளிட்ட அடுத்தகட்ட சட்ட மற்றும் இராஜதந்திர நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் ஆசிய மெய்வல்லுநர் சாம்பியன்ஷிப் போட்டியிலும், 2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியிலும் இலங்கைக்காக தங்கப் பதக்கம் வெல்லும் முக்கிய எதிர்பார்ப்பாக ருமேஷ் தரங்க திகழ்கிறார்.

அவரது விளையாட்டு பயணத்திற்கு தேவையான அனைத்து அரச ஆதரவு மற்றும் வசதிகளையும் தொடர்ச்சியாக வழங்குவதற்கு இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எமது மெய்வல்லுநர் நட்சத்திரத்தின் ஒலிம்பிக் கனவுக்காக அரசாங்கம் தொடர்ந்து துணை நிற்கும்” என அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

Previous Post

எயார்பஸ் விவகாரம் : சந்தேகநபராக பெயரிடப்பட்ட நாமல் ராஜபக்ச

Next Post

மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

Next Post
மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது; கடைசி போட்டியில் சீ ஹோக்ஸ் – புளூ ஈக்ள்ஸ்

September 15, 2026
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

September 15, 2026
மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

September 15, 2026
விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

September 15, 2026

Recent News

முதலாவது வெற்றிக்கான தாகத்துடன் ரட்னம் – நியூ யங்ஸ் அணிகள் மோதுகின்றன

சுப்பர் லீக் முதல் சுற்று இன்றுடன் நிறைவடைகிறது; கடைசி போட்டியில் சீ ஹோக்ஸ் – புளூ ஈக்ள்ஸ்

September 15, 2026
எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு ஐந்தாவது தடவையாக கூடியது!

September 15, 2026
மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

மயிலத்தமடு – மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் மேய்ச்சல் தரை உரிமையினை வலியுறுத்தி தொடர் போராட்டம்

September 15, 2026
விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

விமானத்தில் சேதமான 5 ஈட்டிகள் | கவலையுடன் நாடு திரும்பிய சம்பியன் ருமேஷ் தரங்க | அரசு நடவடிக்கை

September 15, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures