பாகிஸ்தானியருக்கு ‘விசா’ வழங்க அமெரிக்கா தடை விதித்துள்ளது.
அமெரிக்காவில் விசா காலம் நிறைவடைந்த நிலையில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அவ்வாறு அனுப்பி வைப்பவர்களை ஏற்றுக் கொள்ளாத நாடுகளுக்கு விசா வழங்க அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதன் பின்னர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் விசா தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகள் பட்டியலில், தற்போது பாகிஸ்தானும், கானாவும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விசா காலம் நிறைவடைந்த நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த பாகிஸ்தானியர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
எனினும், அவர்களை ஏற்க பாகிஸ்தான் மறுத்து விட்டதாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.