Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வனவளத் திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் | ரவிகரன்

September 3, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வனவளத் திணைக்களம் என்பது தமிழ் மக்களின் காணிகளை அத்துமீறி அபகரிக்கின்ற ஒரு திருட்டுக்குழு.வனவளத்திணைக்களத்தின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டுமென அபிவிருத்திக்குழுத்தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவிடம் பாராளுமன்ற  உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.

வவுனியா – செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்  இன்று வியாழக்கிழமை (03)    நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொல்லியல்திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை இவற்றின் வரிசையில் வனவளத் திணைக்களமும் எமது மக்களின் காணிகளை ஆக்கிரமிக்கும் செயற்பாட்டில் மும்முரமாக ஈடுபடுகின்ற திணைக்களங்களாகும்.

இவ்வாறு மக்களின் காணிகளை மும்முரமாக அபகரிக்கின்றதிணைக்களங்களே ஆளும் தேசியமக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஆப்புவைக்கின்ற செயற்பாட்டைச் செய்யும் என பிரதிஅமைச்சர் உபாலி சமரசிங்கவிற்கும், வன்னிமாவட்ட ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்கனவே தெரிவித்திருக்கின்றோம்.

இந்நிலையில் இம்மாதம் 1 ஆம் திகதி  இடம்பெற்ற வவுனியா நகர் பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்கவும், ஏனைய ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு வெளியிட்டிருப்தை வரவேற்கின்றோம்.குறிப்பாக வனவளத் திணைக்களத்தின் நிலஅபகரிப்பின் தீவிரத் தன்மையை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

முல்லைத்தீவில் கடந்ககாலத்தில் 2,22006 ஏக்கர் அடர்ந்த காடுகளே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு முல்லைத்தீவில் 4,32141ஏக்கர் நிலங்கள் வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறாக வனவளத் திணைக்களம் எமது மக்களின் காணிகளில் அத்துமீறி எல்லைக் கற்களையிட்டு ஆக்கிரமிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக மக்களின் நெற்செய்கைக் காணிகளும், உபஉணவுப் பயிற்செய்கைக் காணிகளும் வனவளத் திணைக்களத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டால் அந்தக் காணிகளுக்குரிய விவசாயிகள் என்னசெய்வது.எனவே வனவளத் திணைக்களத்தின் இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராக பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளவேண்டும்.

எமது மக்கள் மண்வெட்டிபிடிக்காக சிறிய மரங்களை வெட்டும்போது, அவர்களுக்கெதிராக வனவளத் திணைக்களம் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்கின்றது. அதேவேளை கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டு பாரிய வனப்பகுதிகளை அழிப்பதற்கு வனவளத்திணைக்களம் ஆதரவாகச் செயற்படுவதாகவும் எமக்கு மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கின்றன.

எனவே இந்தவிடயங்கள் தொடர்பிலும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.எமது வன்னிப் பிராந்தியத்தைக் காப்பாற்றுங்கள் என்றே நாம் கோருகின்றோம்.வனவளத்திணைக்களத்திற்கு மக்களின் காணிகள் எதற்கு? எமது விவசாயிகளின் காணிகளை அவர்களிடமே வழங்குங்கள்.

வனவளத் திணைக்களத்தினரா  விவசாயம் செய்கின்றனர்? எமது மக்கள் தமது காணிகளில் விவசாயத்தை மேற்கொண்டு அன்றாட வாழ்வாதாரத்தை கொண்டுசெல்வதற்குரிய வழிவகைகளை ஏற்படுத்துங்கள்.வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கெதிராக அண்மையில் எதிர்ப்பு வெளியிட்டதைப்போன்று, வனவளத் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கெதிரான நடவடிக்கைகளை செயலிலும் காண்பியுங்கள்.வனவளத்திணைக்களம் மக்களின் காணிகளைத் திருடும் திருட்டுக்கூட்டம் என்றார்.

Previous Post

தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பிக்களுக்கு எதிராக முறைப்பாடு

Next Post

சத்தியம் செய்யுங்கள் | எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

Next Post
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

சத்தியம் செய்யுங்கள் | எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

September 3, 2026
இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

September 3, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

சத்தியம் செய்யுங்கள் | எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

September 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வனவளத் திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் | ரவிகரன்

September 3, 2026

Recent News

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

உண்மை சம்பவங்களை தழுவி உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

September 3, 2026
இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

இலங்கையை வெற்றி பெறச்செய்த நிலக்ஷிகாவின் அரைச் சதம், அத்தப்பத்துவின் ஹெட் – ட்ரிக்

September 3, 2026
தமிழக முதலமைச்சர் விஜய் வெளியிட்ட புதிய அறிவிப்பு

சத்தியம் செய்யுங்கள் | எதிர்க்கட்சிகளுக்கு தமிழக முதல்வர் கோரிக்கை

September 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

வனவளத் திணைக்களத்தின் காணி ஆக்கிரமிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் | ரவிகரன்

September 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures