மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான நிவின் பாலி கதையின் நாயகனாக நடித்து, கடந்த 21ஆம் திகதி முதல் மலையாள மொழியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் தமிழ் பதிப்பு எதிர்வரும் நான்காம் திகதியன்று தமிழகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இதைத் தொடர்ந்து படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் படக்குழுவினர் பங்கு பற்றிய பிரத்யேக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
இதில் தயாரிப்பாளர் பகத் பாசில், இயக்குநர் கிரிஷ் ஏ டி ஆகியோர் பங்கு பற்றினர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் டைட்டில் கேரளாவில் தேவாலயங்களுக்கு அருகே வசிப்பவர்களை இப்படி வகைப்படுத்தி இருப்பார்கள். அதை எதிரொலிக்கும் வகையில் தான் டைட்டில் இடம் பிடித்திருக்கிறது.
இப்படத்தில் மைய கதாபாத்திரமான ஜஸ்டின் கதாபாத்திரம் எம்முடைய நெருக்கமான ஒருவரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
மலையாள ரசிகர்கள் இதனை ஏற்றுக்கொண்டு கொண்டாடி வருவதை போல் தமிழ் ரசிகர்களும் இப்படத்திற்கு பெரும் பேராதரவு வழங்குவார்கள் என நம்புகிறேன்” என்றார்.












