வங்குரோத்து நிலையிலுள்ள சில அரசியல் கட்சிகள் அரசாங்கத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், கடன் விவகாரத்தை அரசாங்கம் திறைமையான முறையில் நிர்வாகம் செய்து வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நாட்டை கடனுடன் பொறுப்பேற்றிருந்தாலும் கடன் சுமையிலிருந்து விடுவித்துவிட்டே நாட்டை மீண்டும் இந்த அரசாங்கம் கையளிக்கும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற கட்டத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் இதனைக் கூறினார்.