இந்த வரவு செலவுத் திட்டத்தில் உயர் கல்வித் துறையின் அபிவிருத்திக்கு கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளமையையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் என உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இந்த வரவு செலவுத் திட்டத்தில் பல்கலைக்கழகத்தின் கற்பித்தல் வளங்களை அதிகரிப்பதற்காக 26 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நாட்டின் சவாலான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொறுப்புடன் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாலேயே எதிர்க்கட்சியினரால் அதனை விமர்சிக்க முடியாதிருப்பதாகவும் அமைச்சர் மேலும் சுட்டி க்காட்டினார்.
வரவுசெலவுத்திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனைக் கூறியுள்ளார்.