அரசாங்கம் பாராளுமன்றத்திலுள்ள சில எம்.பி.க்களுக்கு பரிசுப் பொருட்களைப் பரிமாறியதனாலேயே வரவு செலவுத் திட்டத்துக்கு வாக்குகள் கிடைக்கப் பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசு தேவநாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் கட்ட வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் 43 மேலதிக வாக்குகளினால் அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.