2015 முதல் 2018 வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சொத்து மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை வழங்குமாறு நாடாளுமன்ற செயலாளரிடம் கோரியுள்ளது.
அதிகாரம்கொண்ட அதிகாரி ஊடாக இன்று முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இந்த விபரங்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.
முறையற்ற வகையில் 3000 ஏக்கர் காணிகளை கொள்வனவு செய்திருப்பதாக றிசாத் பதியுதீன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணைக்காக இந்த விபரங்களை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கோரியுள்ளது.
ஆனாலுமும், 1975ம் இலக்க சொத்து பொறுப்புகள் சட்டத்தின் 1ம் சரத்தின் படி, சொத்துப்பொறுப்பு விபரங்களை வெளியிடும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு இல்லை என்று, நாடாளுமன்றின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.