ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமித்ததன் மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் பிளவுகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தடுத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மிகச்சரியான தீர்மானமொன்றை முன்னெடுத்தார். கட்சியின் பிளவுகளை தடுத்து கட்சியை ஒன்றாக்க அவர் எடுத்த முடிவின் பிரகாரம் இன்று ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் புதுப்பொலிவுடன் ஒன்றிணைந்து எமது பலம் ஏனையவர்களுக்கு சவாலாக மாறியுள்ளது. இன்று ஐக்கிய தேசிய கட்சியுடன் பலர் ஒன்றிணைந்துள்ளனர். இது எமக்கு மிகப்பெரிய பலமாகும்.
எஞ்சியுள்ள குறுகிய காலத்தில் நாம் வேகமாக செயற்பட வேண்டியுள்ளது. இன்னமும் 45 நாட்களே ஜனாதிபதி தேர்தலுக்காக உள்ளது.
இப்போதும் சஜித் பிரேமதாஸ மீதான நம்பிக்கையில் ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர். சகல தரப்பும் எம்முடன் இணைத்து வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.