ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருடைய சம்பள முரண்பாடு தொடர்பில் இன்று அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
அத்துடன், ஆசிரியர், அதிபர்கள் ஆகியோரின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையும் இன்று அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் அமைச்சரவை உப குழுவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.