ஜனாதிபதித் தேர்தலில் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு மீண்டும் 5 ஆம் திகதி கூடவுள்ளதாக அக்கட்சியின் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமையில் நேற்றிரவு (30) கூடிய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இக்கூட்டம் சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும் கூறப்படுகின்றது.