யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணைவேந்தர் தெரிவையும் நியமனத்தையும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.