ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்றிரவு ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் ஜனாதிபதி வேட்பாளரும், பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளரும் அமைச்சருமான அகில விராஜ்காரியவசம் மற்றும் கட்சியின் தவிசாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் ஆகியோர் கலந்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
நேற்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.