சம்பள அதிகரிப்பைக் கோரி முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இன்று(02) ஏழாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த 25 ஆம் திகதி இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. அரசாங்கம் தமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வரையில் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென ரயில்வே ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
காலை வேளையில் சாதாரணமாக பயணிக்கும் 30 ரயில்களில் நேற்றைய தினம் 10 ரயில்கள் மாத்திரமே சேவையில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.