ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று மாலை நடைபெறவுள்ளது.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
தற்கால அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுனவில் உள்ளடங்கும் கட்சித் தலைவர்கள் நேற்று மாலை அலரிமாளிகையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.