பெருந்தோட்டத் தொழிலாளர்களது நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது.
பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.
அதற்கு முன்னதாக இலங்கை தொழிலாளர் காங்கிஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்டத்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் திறைசேரி அதிகாரிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்றும் இன்று காலை இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதந்த சம்பளம் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி வழங்கப்பட்டு வருகின்றது.
எனினும் தொழிலாளர்களுக்கான சம்பள பணத்தை தோட்ட நிறுவனங்கள் வழங்கவில்லை என தோட்ட நிர்வாகம் தெரிவித்தாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு சில பகுதிகளில் நேற்றைய தினம் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், சில தொழிற்சாலைகள் அமைந்துள்ள தோட்டங்களுக்கு நேற்று இரவு வேளையில் சம்பளம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.