கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் I.D.H மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது.
சுற்றுலாத்துறை வழிகாட்டியாக பணியாற்றும் 50 வயதான அவர் குறித்து, மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இத்தாலியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலருடன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர் சேர்ந்து பயணித்துள்ளார். இதன்போதே, அவர் தொற்றிற்கு இலக்காகியிருக்கலாமென நம்பப்படுகிறது.