முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு 3 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் 3 இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்துள்ளார்.
முறையற்ற கொடுக்கல் வாங்கலூடாக அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக சரண குனவர்தன செயற்பட்ட 2007ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் திகதி தொடக்கம் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3 வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு 9,60,000 ரூபா வீதம் முறையற்ற விதத்தில் வரி செலுத்தியமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரண குணவர்தனவிற்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.