இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2 வது T20 போட்டி இன்று இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் ஹோல்கார் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று முன்தினம் நடைபெற இருந்த நிலையில் அது மழைக் காரணமாக கைவிடப்பட்டது.
அதேவேளை இந்த T20 தொடரின் மூன்றாவதும் இறுதியான போட்டி எதிர்வரும் 10ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.