இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் விடுமுறைகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் புகையிரத ஊழியர்கள் முன்னெடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில்வே ஊழியர்கள் தங்களது பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவருக்கும் அறிவிப்புச் செய்ய வில்லையென போக்குவரத்துத் துறை பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.