நாட்டில் நிலவிவரும் சீரற்ற கால நிலையின் காரணமாக 23 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 80,007 பேர் இதுவரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.
இதனால் 3696 குடும்பங்களைச் சேர்ந்த 15,000 பேர் 42 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
அனர்த்தங்களில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளதுடன் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மாத்திரம் 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அவசர உதவிகளை வழங்குவதற்காக அரசாங்கம் 12 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மண் சரிவு அனர்த்தம் இடம்பெறும் பகுதிகளிலுள்ள மக்களை அங்கிருந்து உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறும் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, களுத்துறை, கொழும்பு, கம்பஹா, கண்டி ஆகிய எட்டு மாவட்டங்களிலுள்ள 61 பிரதேச செயலகப் பிரிவு மக்கள் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் தற்போதைய சீரற்ற காலநிலை தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ரன்ஞித் மத்தும பண்டார இதனைக் கூறியுள்ளார்.