சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் (26) நாளையும் அரச பாடசாலைகளின் அதிபர் சங்கங்கள் ஆசிரியர் சங்கங்கள் என்பன ஒன்றிணைந்து சுகயீன விடுமுறைப் பணிப்ப பகிஸ்கரிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
ஆசிரிய, அதிபர் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திடம் முன்வைத்த கோரிக்கைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தர முன்வராததன் காரணமாக இந்த தொழிற்சங்க நடவடிக்கை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.
நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் இந்த சுகயீனப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த இரு தினங்களிலும் உயர் தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் அப்பணிகளிலிருந்து விலகியிருக்க தீர்மானித்துள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் முகம்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்தல் வழங்கியிருந்தும், இதுவரையில் எந்தவித பதிலையும் அரசாங்கம் வழங்கவில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.