ஐக்கிய தேசியக் கட்சியில் உருவாகியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சைக்கு இன்று (26) முடிவு கட்டப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று மாலை சிறிக்கொத்தவில் நடைபெறும் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் வைத்து உத்தியோகபுர்வமாக அறிவிக்கப்படவுள்ளார்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவினால், அக்கட்சியின் பிரதிதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச வேட்பாளராக பிரகடனம் செய்யப்படவுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாசவின் பெயர் முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் அதற்கான அனுமதி பெறப்படவுள்ளது.
சஜித் பிரேமதாசவை வேட்பாளராக கொண்டுவருவதற்கு ஐக்கிய தேசிய முன்னணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களும் கடந்த 24 ஆம் திகதி தமது இணக்கத்தை வெளிப்படுத்தியிருதமை குறிப்பிடத்தக்கது.