நிபந்தனை போட்டு கட்டுப்பாட்டின் கீழ் அடைபட்டு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தான் ஒருபோதும் தயாரில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று மாலை மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
நிபந்தனையுடன் கூடிய அரசியல் பயணத்திற்கு தான் ஒருபோதும் இணக்கம் தெரிவிக்கப் போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நான் யாருடைய கை பொம்மையும் இல்லை எனவும் எந்த தடை வந்தாலும் தன்னுடைய பயணத்தை நிறுத்த போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவியை வழங்குவதாயின் அவர் ஜனாதிபதியாக வந்ததும், ஆறு மாதங்களுக்குள் ஜனாதிபதி முறைமையை நீக்குவதாகவும், அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள உடன்படுவதாகவும் இணக்கம் தெரிவிக்க வேண்டும் என கட்சித் தலைமை நிபந்தனை விதித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.