ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மிகவும் விருப்பமான பதவி பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவர் பதவியாகும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாவார் எனவும், இதனையடுத்து அமைக்கப்படும் அரசாங்கத்தில் ரணில் விக்ரமசிங்க எதிர்க் கட்சித் தலைவராக வருவார் எனவும் அவர் மேலும் கூறினார்.
எஸ்.பி. திஸாநாயக்கவும், டிலான் பெரேராவும் இணைந்து நேற்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.