பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இரட்டைவேடம் போடுகின்றார் என்று கூறப்படுகின்றது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கூட்டு எதிரணி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் என்று அறிவித்துள்ளது. அதற்காகக் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப் பினர்களிடத்தில் கையெழுத்துப் பெறப்பட்டு வருகிறது.
கையெழுத்துப் பெறப்படும் ஆவணம் ஊடகங்களுக்குக் கிடைத்துள்ளது. அதில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் 18 உறுப்பினர்கள் மாத்திரம் கையெழுத்திட்டுள்ளனர்.
அதில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தனவும், சமல் ராஜபக்சவும் இன்னமும் கையெழுத்திடவில்லை.
அதேவேளை, நம்பிக்கையில்லா பிரேரணையில் மகிந்த ராஜபக்சவும் இன்னமும் கையெழுத்திடவில்லை. அவரது பெயரும் அந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை.
மகிந்த ராஜபக்ச இதில் கையெழுத்திட வேண்டுமா இல்லையா என்பது பற்றி இன்னமும் கூட்டு எதிரணி முடிவு செய்யவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.