துருக்கியில் குடியேறிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 5 குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என்று கிரேக்க கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
படகில் சுமார் 20 நபர்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. விபத்தில் சிக்கிய மற்றவர்களைத் துருக்கி கடற்கரையோரம் அருகே உள்ள, அகதொனிசி தீவில் கடலோரக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வைத்து தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
2016ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியுடன் உடன்படிக்கை செய்திருந்ததை அடுத்து, கிரேக்கத்துக்கு செல்லும் குடியேறிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது.
ஐ.நா. அகதிகள் உயர் ஆணையத்தின் தரவுகள்படி, இந்த ஆண்டு இதுவரை 4ஆயிரம் குடியேறிகள் கடல் வழியாக கிரேக்க தீவுகளுக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது