பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் புதிய போட்டியாளராக வந்துள்ள கஸ்தூரி, முதல் வாரமே சிறைக்கு செல்லும் தண்டனையைப் பெற்றுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு மூலம் போட்டியாளர் ஆனார் கஸ்தூரி. வந்ததும் பரபரவென அனைத்து போட்டியாளர்களிடமும் கேள்விகளைக் கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அவர் அடுத்தடுத்த நாட்களில் அமைதியாக விளையாட ஆரம்பித்து விட்டார்.
இது முதல் வாரம் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது என கண்டிப்பாக பிக்பாஸ் கூறிவிட்டார். எனவே இந்த வாரம் நாமினேஷனில் இருந்து அவர் தப்பி விட்டார்.
ஆனால், கடந்த வார டாஸ்க்கில் சரியாக விளையாடாத போட்டியாளராக தேர்வாகி விட்டார் கஸ்தூரி. இதனால் அவரை சிறையில் அடைத்து விட்டார் பிக் பாஸ். நிகழ்ச்சிக்கு வந்த முதல் வாரமே கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பார்ப்போம், இனியாவது ஒழுங்காக விளையாடுகிறாரா என்று…?