தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.இன்று காலை முதல் உரிய நேரத்துக்கு தொடர்ந்து சேவைகள் இயக்கப்படுவதாக, தொடருந்து பிரதான கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
தொடருந்து திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடர்ந்து ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.
எனினும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.
கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்து தொடருந்து பணியாளர் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்தநிலையில், அந்த நடவடிக்கைகளை கைவிடுமாறு தொடருந்து முகாமையாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டிருந்தது.