மதுபோதையில் வாகனம் செலுத்துகின்ற சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விசேட ஒருமாத கால வேலைத்திட்டம் ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
காவற்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
மதுபோதையில் வாகனம் செலுத்துகின்றமைக்காக கைதுசெய்யப்படுகின்ற சாரதிகளை விடுவிக்க அழுத்தம் கொடுக்கின்ற நபர்கள் குறித்தும் விபரங்கள் பதிவு செய்யப்படவுள்ளன.
அதேநேரம், கைது செய்யப்படுகின்ற சாரதிகள் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால், அவரை கைது செய்த காவற்துறை அதிகாரிகளுக்கு பரிசில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்காலத்தில் போதைப் பொருள் கடத்தல்கள் உள்ளிட்ட போதைப்பொருள் சம்மந்தமான தகவல்களை 1984 என்ற அவசர இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு வழங்க முடியும் என்று காவற்துறை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.