தமக்கு நேர்ந்த கொடுமைகளை ஊடகங்களில் வெளிப்படுத்திய பண்டாரகம, அட்டுல்கம பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவரின் வீட்டுக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடியமைக்காக கைது செய்யப்பட்ட ஆறு பேர் இந்த மாதம் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, இந்த சம்பம் தொடர்பாக வேறு சந்தேகநபர்கள் இருந்தால் அவர்களையும் கைது செய்யுமாறு நீதவான் அறிவுறுத்தினார்.